Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாசி படர்ந்த ரங்கசாமி குளம் சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்த ரங்கசாமி குளம் சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்த ரங்கசாமி குளம் சீரமைக்க வலியுறுத்தல்

பாசி படர்ந்த ரங்கசாமி குளம் சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூன் 08, 2024 11:11 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காந்தி சாலை, விளக்கொளிபெருமாள் கோவில் தெருவிற்கு இடையே ரங்கசாமி குளம் அமைந்துள்ளது. அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், 2011ம் ஆண்டு, 23 லட்சம் ரூபாய் செலவில், குளத்தின் உட்பகுதியைசுற்றிலும் நடைபயிற்சிக் கான நடைபாதை, இருக்கை வசதி, மின் விளக்கு உள்ளிட்ட வசதி களுடன் சீரமைக்கப்பட்டன. பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வந்தனர்.

முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபயிற்சிக்கான நடைபாதையில், இரவு நேரத்தில், சமூக விரோதிகள் மது அருந்தி விட்டு, காலி மதுபாட்டில்களை உடைத்துவிட்டு சென்றனர். இதனால், பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வதை தவிர்த்தனர். பயன் பாடின்றி இருந்ததால், ரங்கசாமி குளம் மூடப்பட்டது.

கடந்த, 2018ல் மத்திய அரசின், சுற்றுலா துறை சார்பில், 'பிரசாத்' திட்டத்தில், 25.39 லட்சம் ரூபாய் செலவில், ரங்கசாமி குளம் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இருப்பினும் குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்கவில்லை. இதனால், இக்குளம் 'வர்தா, கஜா' போன்ற புயலின்போது பெய்த மழைக்கு கூட குளம் முழுமையாக நிரம்பவில்லை.

மாறாக, குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாயில், சிலர் முறைகேடாக கழிவுநீரை விட்டதால், குளத்தில் கழிவுநீர் தேங்கியது. தற்போது, குளத்தில் உள்ள நீர் பாசிபடர்ந்து பச்சை நிறமாக மாறியுள்ளது. மேலும், குளத்தில் ஆங்காங்கே புற்கள் வளர்ந்துள்ளன. மேலும், 2011 - 2018 வரை என, ஏழு ஆண்டுகளில், 48.39 லட்சம் ரூபாய் செலவழித்து சீரமைக்கப்பட்ட ரங்கசாமி குளம் சீரழிந்த நிலையில் உள்ளது.

எனவே, ரங்கசாமி குளத்தையும், குளத்திற்கு மழைநீர் வரும் கால்வாய்களையும் முழுமையாக துார்வாரி சீரமைக்க வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us