Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ மாடுகள் உலாவும் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

மாடுகள் உலாவும் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

மாடுகள் உலாவும் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

மாடுகள் உலாவும் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 02, 2024 11:39 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தபேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளியில், 50க்கும் மேற்பட்ட மாணவ- -- மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியை சுற்றிலும் முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. முகப்பு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதி கடந்த ஆண்டு இடிந்துவிட்டது.

பள்ளிக்கு முழுமையாக சுற்றுச்சுவர் அமைக்காததால், பள்ளி வளாகம் மாடுகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது. மாடுகள் மேய்வதால், பள்ளி மாணவ- - மாணவியர், ஆசிரியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும், விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தில் சமூக விரோத செயல்கள் அரங்கேறுகிறது. எனவே, மாணவ- - மாணவியரின் பாதுகாப்பு கருதி, நத்தப்பேட்டை ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளிக்கு முகப்பு பக்கத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும்.

மேலும், விடுபட்ட இடங்களில் சுற்றுச்சுவர் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பள்ளியில் பயிலும், மாணவ- - மாணவியரின் பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us