Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஏகாம்பரர் கோவில் மாடவீதிகளில் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

ஏகாம்பரர் கோவில் மாடவீதிகளில் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

ஏகாம்பரர் கோவில் மாடவீதிகளில் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

ஏகாம்பரர் கோவில் மாடவீதிகளில் நடைபாதை சீரமைக்க வலியுறுத்தல்

ADDED : ஜூலை 28, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மின்விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு ஏற்படுத்த, மத்திய அரசு கடந்த, 2014ல், 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

அதன்படி, பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின்கீழ், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நடைபாதை அமைக்கப்பட்டது.

கட்டுமானப் பணி தரமற்ற நிலையில் இருந்ததால், நடைபாதை ஓரம் அமைக்கப்பட்டு தடுப்புச்சுவர் கற்கள் ஒரு சில ஆண்டுகளிலேயே சரிந்து விழுந்தன.

தடுப்புச் சுவர் கற்களை இணைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த துருப்பிடிக்காத இரும்பு உருளை கம்பிகளும் மாயமாகியுள்ளன. நடைபாதையில் செடி, கொடிகள் மண்டியுள்ளதால், லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, ஏகாம்பரநாதர் கோவில் மாடவீதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள நடைபாதையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us