Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தார்ப்பாய் மூடாத கு ப்பை லாரிகள் ஒரகடம் சாலையில் சுகாதார சீர்கேடு

தார்ப்பாய் மூடாத கு ப்பை லாரிகள் ஒரகடம் சாலையில் சுகாதார சீர்கேடு

தார்ப்பாய் மூடாத கு ப்பை லாரிகள் ஒரகடம் சாலையில் சுகாதார சீர்கேடு

தார்ப்பாய் மூடாத கு ப்பை லாரிகள் ஒரகடம் சாலையில் சுகாதார சீர்கேடு

ADDED : ஜூலை 25, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:தாம்பரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது. குப்பை ஏற்றிச் செல்லும் லாரிகள், வண்டலுார் --- ஒரகடம் நெடுஞ்சாலையில், படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன.

லாரியில் குப்பையை ஏற்றிச் செல்லும்போது, அவை காற்றில் பறக்காமல் இருக்க, தார்ப்பாய் அல்லது துணிவலை வாயிலாக லாரியினை முழுமையாக மூட வேண்டும்.

இதை பின்பற்றாமல், அதிகமாக குப்பையை ஏற்றிக் கொண்டு, வேகமாக செல்லும் லாரிகளில் இருந்து, குப்பை காற்றில் பறந்து சாலையில் விழுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும், நெரிசல்களில் நிற்கும்போது, குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டிகள் முகச்சுளிப்புக்கு உள்ளாவதோடு, நோய்த்தொற்று பரவும் சூழல் நிலவுகிறது.

எனவே, குப்பையை, தார்ப்பாய் வாயிலாக முழுமையாக மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us