ADDED : ஜூன் 28, 2024 10:36 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தவேல், 42, என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.