ADDED : ஜூன் 07, 2024 08:00 PM
காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன், 46; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், வயல்வெளியில் இருந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அவர் மீது மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஒரகடம் போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.