Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வர்ணம் பூசாத வேகத்தடையால் கிளாய் சாலையில் விபத்து அபாயம்

வர்ணம் பூசாத வேகத்தடையால் கிளாய் சாலையில் விபத்து அபாயம்

வர்ணம் பூசாத வேகத்தடையால் கிளாய் சாலையில் விபத்து அபாயம்

வர்ணம் பூசாத வேகத்தடையால் கிளாய் சாலையில் விபத்து அபாயம்

ADDED : ஜூன் 15, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்து, கிளாய் கூட்டுரோடு சந்திப்பில் இருந்து கிளாய் செல்லும் பிரதான சாலை பிரிந்து செல்கிறது.

இந்த சாலை வழியே, சிறுகிளாய், ஆயகொளத்துார், பட்டிச்சேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை, வயலுார் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு, நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்தினை தவிற்கும் வகையில், வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த, 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.

இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை எங்குள்ளது என தெரியாமல், அதில் ஏறி, நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.

எனவே, வேகத்தடைகள் மீது வண்ணம் பூச, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us