/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை
அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை
ADDED : ஜூலை 16, 2024 12:53 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஒன்றியம், அய்யங்கார்குளம் கிராமத்தில், கொளக்கியம்மன், மாரியம்மன், பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் நான்கு நாட்கள் நடைபெறும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான திருவிழா, கடந்த 11ம் தேதி காலை, கொளக்கியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும், பொங்கல் வைக்கும் நிகழ்வுடன் துவங்கியது.
மாலை 5:00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்வும், தொடர்ந்து பூங்கரகம் புறப்பாடும் நடந்தது.
இரண்டாம் நாள் உற்சவமான, கடந்த 12ம் தேதி காலை 10:00 மணிக்கும், மாலை 5:00 மணிக்கும் பூங்கரகம் புறப்பாடும், இரவு தெருக்கூத்தும் நடந்தது.
மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 13ம் தேதி, பிற்பகல் 12:30 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 6:00 மணிக்கு மாரியம்மன் வீதியுலாவும், இரவு 10:00 மணிக்கு நாடகமும் நடந்தது.
ஆடித் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை 10:00 மணிக்கு பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 12:00 மணிக்கு நடுத்தெரு சுந்தர விநாயகர் கோவில் அருகில் சிறப்பு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.