Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சேதமடைந்த குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டி

சேதமடைந்த குடிநீர் தொட்டி

ADDED : ஜூன் 17, 2024 03:59 AM


Google News
Latest Tamil News
புரிசை : காஞ்சிபுரம் அடுத்த, புரிசை ஊராட்சி தோப்பு தெருவில், சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நீர்த்தேக்க தொட்டியில் வினியோகிக்கப்படும் தண்ணீரை, தோப்பு தெரு மக்கள் மற்றும் புரிசை உயர்நிலைப் பள்ளி மாணவ- - மாணவியர் குடித்து வந்தனர்.

இது, ஒரு சில ஆண்டுகள்மட்டுமே, பயன்பாட்டில் இருந்தது. அதன் பின், பயன்பாடு இன்றி உள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மர்ம நபர்கள், சிறு மின் விசை நீர்த்தேக்க தொட்டியை உடைத்துள்ளனர்.

அதன் பின், தண்ணீரை தேக்கி, குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, சேதமடைந்த சிறு மின்விசை நீர்த்தேக்க குடிநீர் தொட்டிக்கு பதிலாக, புதிய குடிநீர் தேக்க தொட்டியை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us