Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெடுஞ்சாலையில் மாடுகள் உலா

நெடுஞ்சாலையில் மாடுகள் உலா

நெடுஞ்சாலையில் மாடுகள் உலா

நெடுஞ்சாலையில் மாடுகள் உலா

ADDED : ஜூன் 14, 2024 12:04 AM


Google News
Latest Tamil News
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், கூட்டமாக உலாவரும் மாடுகளால், விபத்து ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

பெங்களூரு -- சென்னை தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலை, திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை உள்ளது.

ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதிகளில் உள்ள பல நுாறு தொழிற்சாலைகளுக்கு, நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், மாத்துார், வல்லக்கோட்டை, வல்லம், போந்துார் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளை வளர்த்து வருபவர்கள், தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்காக சாலையில் விடுகின்றனர்.

அவை கூட்டம் கூட்டமாக, நெடுஞ்சாலையில் வலம் வருகிறது. திடீரென சாலையில் குறுக்கே ஓடுவதால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள், திடீரென சாலையின் குறுக்கே வரும் மாட்டின் மீது மோதி, விழுந்து காயமடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது.

எனவே, நெடுஞ்சாலையில் விபத்துக்கு வழிவகுக்கும் வகையில் திரியும் மாடுகளை பிடித்து, கோ சாலையில் அடைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us