ADDED : ஜூன் 06, 2024 01:27 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், மூன்றாம் நாள் உற்சவமான கடந்த 3ம் தேதி கருடசேவையும், நான்காம் நாள் உற்சவமான நேற்று முன்தினம், சேஷ வாகனமும், நேற்று காலை நாச்சியார் திருக்கோலத்தில், பல்லக்கில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு யாளி வாகன உற்சவம் நடந்தது.
இதில், ஆறாம் நாள் உற்சவமான இன்று காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் சப்பரத்தில் எழுந்தருளி வைகுண்ட பெருமாள் உலா வருகிறார். இரவு யானை வாகன உற்சவம் நடக்கிறது.
ஏழாம் நாள் பிரபல உற்சவமான தேரோட்டம் நாளை காலை 8:00 மணிக்கு நடக்கிறது.