Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை

பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை

பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை

பள்ளூர் வராஹி கோவிலில் தேரோட்டம் வெகுவிமரிசை

ADDED : ஆக 01, 2024 01:19 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், பள்ளூர் கிராமத்தில், அரசாலையம்மன் என்ற வராஹி கோவில் உள்ளது. இங்கு, ஜூலை- 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.

தினசரி இரவு 8:00 மணி அளவில் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம், யானை வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில், வராஹி அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நேற்று காலை 10:30 மணி அளவில், பள்ளூர் காலனி மக்கள் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். இதை, சிவாச்சாரியர் அகாஷ், வராஹி அம்மனுக்கு சாத்தினார்.

தொடந்து, திருமாங்கல்யம் அணிவித்து, துாப தீபாராதனை காட்டப்பட்டது. அடுத்து தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தப்பட்டது. தேரை, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us