Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

இசை பள்ளியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 06, 2024 10:07 PM


Google News
காஞ்சிபுரம்:தமிழக அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி, சதாவரம், ஓரிக்கை பகுதியில் இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, நடப்பு கல்வி ஆண்டுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் வார நாட்களில், காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. இங்கு, 12 - 25 வயது வரையிலானள ஆண், பெண் என இருபாலரும் பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டு.

இசை பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வளாக நேர்காணல் வாயிலாக தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராக பணிபுரிய வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறது.

மேலும், நாதஸ்வரம், தவில், தேவாரம் பயின்ற மாணவர்கள், அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியவும் வேலை வாய்ப்புகள் பெற்று வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, இசைப்பள்ளி அலுவலகத்தை, 94425 72948 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us