Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ புதர் மண்டிய மயானம் சீரமைக்க எதிர்பார்ப்பு

புதர் மண்டிய மயானம் சீரமைக்க எதிர்பார்ப்பு

புதர் மண்டிய மயானம் சீரமைக்க எதிர்பார்ப்பு

புதர் மண்டிய மயானம் சீரமைக்க எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 12, 2024 01:50 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, தண்டலம் ஊராட்சியில், பள்ளம்பாக்கம் அருந்ததியர்பாளையம் துணை கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்தால், புதைக்கவும் மற்றும் எரிக்கவும் சுடுகாடு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு, கை பம்பு மற்றும் சுற்றுச்சுவர் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த சுடுகாடு வளாகத்தில், சீமைக்கருவேல மரங்கள் புதர் மண்டிக்கிடக்கின்றன. இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு, சுடுகாடு பகுதியை சீரமைத்து, குடிநீர், பாதை ஆகிய வசதிகளை உறுதிப்படுத்திக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us