Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ஜல்லி கற்கள் பெயர்ந்த பிருந்தாவன் நகர் சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த பிருந்தாவன் நகர் சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த பிருந்தாவன் நகர் சாலை

ஜல்லி கற்கள் பெயர்ந்த பிருந்தாவன் நகர் சாலை

ADDED : ஜூன் 25, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, செவிலிமேடு செல்லியம்மன் கோவிலில் இருந்து,பிருந்தாவன் நகருக்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.

இப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது வீணாகும் குடிநீர் மற்றும் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லை.

பிருந்தாவன் நகர் பிரதான சாலையின் குறுக்கே செல்லும் நீரால் மண் அரிப்பு ஏற்பட்டு, ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்த பகுதியில் மழைநீர் குட்டைபோல தேங்கியுள்ளது.

இதனால், இவ்வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்து மழைநீர் தேங்கும் பகுதியில் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பதோடு அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பிருந்தாவன் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us