/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
சிறுவர்களுக்கான மாநில தடகளம் செயின்ட் ஜோசப் பள்ளி 2வது இடம்
ADDED : ஜூலை 16, 2024 12:59 AM

சென்னை, மத்திய அரசின் குறு, சிறு தொழில் அமைச்சகம், பிட் இந்திய அமைப்பு சார்பில், சிறுவர்களுகான மாநில தடகளப் போட்டி, வண்டலுாரில் நடந்தது.
இதில், 50 மீ., 100 மீ., 500 மீ., ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டன. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 76 பள்ளிகள் மற்றும் ஒன்பது தனியார் அகாடமிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
போட்டியில், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இருந்து, 75 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
அப்பள்ளியின் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக, 5 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்களை வென்று, இரண்டாவது இடத்தை தட்டிச் சென்றது.
அதே பள்ளியின் சினாமிகா, இறை அருள்ஆகியோர் தனி நபர்'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தினர்.
போட்டியில், முதலிடத்தை கவுரிவாக்கத்தைச் சேர்ந்த மலை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிகைப்பற்றியது.