Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ போதையில் வாலிபரை கடித்த ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபரை கடித்த ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபரை கடித்த ஆட்டோ ஓட்டுனர் கைது

போதையில் வாலிபரை கடித்த ஆட்டோ ஓட்டுனர் கைது

ADDED : ஆக 07, 2024 02:35 AM


Google News
Latest Tamil News
புழல், செங்குன்றம் அடுத்த சோழவரம் மாறம்பேடு, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன், 32. இவர், நேற்று முன்தினம் இரவு, புழல் காவாங்கரை அருகே உள்ள 'பெட்ரோல் பங்க்'கில், தன் நண்பரை சந்திக்க நின்றிருந்தார்.

அப்போது, ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்த நபர், முருகன் மீது மோதுவது போல் வந்துள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுனர், முருகனை சரமாரியாக தாக்கி, அவரது கையில் பல இடங்களில் கடித்துள்ளார். காயமடைந்த முருகனை ரோந்து போலீசார் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில், புழல், சண்முகபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பழனி, 45, என தெரிந்தது. இதையடுத்து, ஆட்டோவை பறிமுதல் செய்த புழல் போலீசார், பழனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us