Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நிறைவு

ADDED : ஜூலை 19, 2024 03:44 PM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆனி மாதத்தில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ பெருவிழா 13 நாட்கள் நடத்தப்படும்.

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான உற்சவம் கடந்த 7ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் வழக்கறுத்தீஸ்வரர் எழுந்தருளி உலா வந்தார்.

ஏழாம் நாள் உற்சவான கடந்த 13ம் தேதி காலை மருகுவார்குழலி அம்பிகையுடன், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.

பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை சந்திரசேகரர் புறப்பாடு நடந்தது. 11:00 மணிக்கு சர்வதீர்த்த குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.

உற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் குளத்தில் பாதுகாப்பு உபகரணங்களுடன் இறங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு ரிஷப வாகனத்துடன் ஆனி திருக்கல்யாண பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us