Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ வரதர் கோவிலில் 7ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

வரதர் கோவிலில் 7ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

வரதர் கோவிலில் 7ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

வரதர் கோவிலில் 7ல் ஆண்டாள் திருக்கல்யாணம்

ADDED : ஆக 04, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருஆடிப்பூரம் உற்சவத்தையொட்டி கடந்த மாதம் 29ம் தேதி முதல், தினமும் மாலை 5:30 மணிக்கு திருவடி கோவில் வரை ஆண்டாள் புறப்பாடு நடைபெறுகிறது.

மீண்டும் திருக்கோவிலுக்கு எழுந்தருளும் ஆண்டாளுக்கு சன்னிதியில் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

ஆடிப்பூரம் தினமான வரும் 7ம்தேதி காலை, வரதராஜ பெருமாள், ஆண்டாள் திருவடி கோவில் புறப்பாடு மற்றும் திருக்கோவில் திருமுற்றவெளியில் மாலை மாற்றல், திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

அதை தொடர்ந்து கண்ணாடி அறையில் தரிசனம் மற்றும் சேர்த்தி நடைபெறும். வரும் 8ம் தேதி, பெருமாள் உபய நாச்சியார், ஆண்டாள் மாட வீதி புறப்பாடு திருக்கல்யாண ஊர்கோலம் நடைபெறுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us