Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ இளைஞர்களை கத்தியால் குத்திய வழிப்பறி கும்பல் அடாவடி

இளைஞர்களை கத்தியால் குத்திய வழிப்பறி கும்பல் அடாவடி

இளைஞர்களை கத்தியால் குத்திய வழிப்பறி கும்பல் அடாவடி

இளைஞர்களை கத்தியால் குத்திய வழிப்பறி கும்பல் அடாவடி

ADDED : ஜூன் 18, 2024 05:17 AM


Google News
படப்பை : வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் தினகரன், 35; திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர், தன் நண்பர்கள் மணிகண்டன், 36, உள்ளிட்ட நான்கு பேருடன், வரதராஜபுரம் காலி மனையில் மது அருந்தினார்.

பின், தினகரன் காரில் அனைவரும் புறப்பட்டபோது, இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர், காரை மறித்தனர். கத்தியால் தினகரனை தாக்கி, அவர் அணிந்திருந்த தங்க மோதிரம், செயினை பறிக்க முயன்றனர்.

தடுக்க வந்த மணிகண்டனின் கையை கத்தியால் வெட்டினர். தினகரன், மணிகண்டன், உடனிருந்த நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

நகையை பறிக்க முடியாத ஆத்திரத்தில், தினகரனின் கார் கண்ணாடியை உடைத்து, மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

காயமடைந்த தினகரன், மணிகண்டன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின், சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us