/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ எரியாத மின்விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம் எரியாத மின்விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்
எரியாத மின்விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்
எரியாத மின்விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்
எரியாத மின்விளக்கால் இருள் சூழ்ந்த பஸ் நிறுத்தம்
ADDED : ஜூலை 27, 2024 12:57 AM

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில், செரப்பனஞ்சேரி அடுத்த காரணித்தாங்கல் பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒரு மாதமாக எரியவில்லை.
இதனால், இரவு நேரங்களில் பேருந்து பயணியர் மற்றும் பெண்கள், இருள் சூழ்ந்த பேருந்து நிறுத்தத்தில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பேருந்து நிறுத்தத்தில் உள்ள உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.