Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கேரட் லோடு லாரி மோதி காரில் பயணித்த 2 பேர் பலி

கேரட் லோடு லாரி மோதி காரில் பயணித்த 2 பேர் பலி

கேரட் லோடு லாரி மோதி காரில் பயணித்த 2 பேர் பலி

கேரட் லோடு லாரி மோதி காரில் பயணித்த 2 பேர் பலி

ADDED : ஜூன் 08, 2024 05:28 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு : சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 33. நேற்று முன்தினம் இரவு, தன் குடும்பத்தினருடன் திண்டிவனத்திலிருந்து சென்னை நோக்கி, 'மாருதி எர்டிகா' காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, திருச்சியிலிருந்து கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, கேரட் லோடு ஏற்றி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற வினோத்தின் கார் மீது மோதியது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, படாளம் கூட்டுச்சாலை அருகே, நள்ளிரவு 1:30 மணிக்கு, இந்த விபத்து நிகழ்ந்தது. இதில், காரில் பயணம் செய்த பார்வதி, 70, சச்சின், 7, ஆகியோர், சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சம்பவ இடத்திற்கு சென்ற படாளம் போலீசார், இருவரது சடலங்களை கைப்பற்றினர். மேலும், படுகாயமடைந்த ரமணி, 52, சாந்தி, 50, வினோத், 33, புவனா, 30, மற்றும் சிப்பிகா, 3, ஆகியோரை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கு அனுப்பினர்.

விபத்தில் சிக்கிய அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்படுத்திய லாரியை கைப்பற்றிய போலீசார், அதன் ஓட்டுனரை தேடுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us