ADDED : ஜூன் 06, 2025 07:42 AM
கள்ளக்குறிச்சி; ரிஷிவந்தியம் அடுத்த பெரியகொள்ளியூரை சேர்ந்த பழனி மகன் பரமசிவம்,28; இவரது மனைவி சீதா,27; இவர்களுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரச்னை காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், ஏமப்பேரில் உள்ள அத்தை கலா வீட்டிற்கு பரமசிவம் சென்று தங்கினார். விரக்தியில் நேற்று முன்தினம் இரவு அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.