ADDED : செப் 07, 2025 05:37 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கிணற்றில் விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொ.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வெங்கடேசன், 42; கூலித்தொழிலாளி. நேற்று காலை 7:00 மணிக்கு இயற்கை உபாதைக்காக வெளியே சென்றபோது, அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். இதில், தலை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.