Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வாகனம் மோதி பெண்  பரிதாப பலி 

வாகனம் மோதி பெண்  பரிதாப பலி 

வாகனம் மோதி பெண்  பரிதாப பலி 

வாகனம் மோதி பெண்  பரிதாப பலி 

ADDED : செப் 05, 2025 07:45 AM


Google News
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே திருமணத்திற்கு சென்ற பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேடு பகுதியை சேர்ந்த சிவபெருமாள் மனைவி கலையரசி,40; இவர் நேற்று அதிகாலை 5.15 மணிக்கு உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி மெயின்ரோட்டில் சாலையோரம் நடந்து சென்றார்.

புதுஉச்சிமேடு சுடுகாடு அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கலையரசி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us