Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'

பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை பணம் 'அபேஸ்'

ADDED : ஜூலை 02, 2025 11:49 PM


Google News
சின்னசேலம் : சின்னசேலத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பெண்ணிடம், நகை பணம் திருடிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி மல்லிகா, 45; இவர், கடந்த மாதம் 26ம் தேதி, பகல் 3:00 மணிக்கு, சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டார். இதற்காக சின்னசேலம் பஸ் நிலையத்திலிருந்து, மினி பஸ்சில் சென்றார். பஸ்சில் நின்றிருந்த மல்லிகா, அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தனது பையை கொடுத்தார்.

பையில் ரூ. 30 ஆயிரம் பணம், 2 கிராம் தங்க நகை இருந்தது. பஸ் சிறிது துாரம் சென்றதும், பஸ்சில் பையுடன் அமர்ந்திருந்த பெண் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us