Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுமா?

காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுமா?

காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுமா?

காவல் நிலையத்தில் மக்கி வீணாகும் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுமா?

ADDED : அக் 05, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் பறிமுதல் செய்த, குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் பாதுகாப்பின்றி, மழையிலும், வெயிலிலும் காய்ந்து வீணாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி போலீஸ் சார்பில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முறையாக பராமரிக்காமலும், பாதுகாப்பு இல்லாமலும், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அருகேயும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழேயும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும், உரிய பாதுகாப்பு இல்லாமல், மக்கி வீணாகி வருகின்றன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், முறையாக பாதுகாக்கப்பட்டு, அவ்வப்போது, போலீசாரால் பொது ஏலத்தில் விடப்படும். இதன் மூலமாக, அரசுக்கு வருவாய் கிடைக்கும்.

எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங் களை ஏலம் விட மாவட்ட காவல் துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us