Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவர் படுகாயம்

ADDED : மே 26, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் படுகாயமடைந்தார்.

அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த பொன்பரப்பியை சேர்ந்தவர் இளந்தமிழன், 30; இவர், செந்துறையில் இருந்து சென்னை மணலி நோக்கி வேன் ஓட்டி சென்றார்.

நேற்று மதியம் 2:15 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பெரியகுப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன், சென்டர் மீடியன் மீது, மோதி கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த செந்துறையை சேர்ந்த சுரேஷ், 22; காயமடைந்தார். அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருநாவலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us