Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரு பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

இரு பெண்கள் மாயம் : போலீசார் விசாரணை

ADDED : செப் 22, 2025 11:33 PM


Google News
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் கமல்பாஷா மகள் ஜெய்துன்பீ, 55; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். உறவினர் ஜலில் என்பவரது வீட்டில் வசிக்கிறார். கடந்த 20ம் தேதி காய்கறி மார்க்கெட்டுக்கு சென்ற ஜெய்துன்பீ வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெய்துன்பீ கிடைக்காததால், உறவினர் இஸ்மாயில் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம் கள்ளக்குறிச்சி அடுத்த வேங்கைவாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மாயாவதி, 40; தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். மாயாவதி கடந்த 19ம் தேதி சென்னை யில் உள்ள மகளை பார்க்க செல்வதாக கணவர் கண்ண னிடம் தெரிவித்து விட்டு சென்றார். ஆனால் அன்று மாயாவாதி சென்னை செல்ல வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.

எங்கு தேடியும் கிடைக் காததால், காணாமல் போன மனைவி மாயாவதியை கண்டுபிடித்து தரக்கோ ரி கணவன் கண்ணன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us