/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்' கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'
ADDED : ஜூன் 28, 2025 12:51 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
உளுந்துாபேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் போலீசார் கடந்த, 29ம் தேதி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், 2 கிலோ கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், காந்தி நகரைச் சேர்ந்த மதிமாறன் மகன் ராம்பிரசாத், 24; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார், 21; ஆகிய இருவரை கைது செய்து, விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரசாந்த், இந்த இருவரையும்
குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.