Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா கடத்தல் வழக்கு 2 பேருக்கு 'குண்டாஸ்'

ADDED : ஜூன் 28, 2025 12:51 AM


Google News
Latest Tamil News
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கஞ்சா கடத்திய 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

உளுந்துாபேட்டை இன்ஸ்பெக்டர் ஷாகுல்ஹமீது மற்றும் போலீசார் கடந்த, 29ம் தேதி டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசு பஸ்சில், 2 கிலோ கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், காந்தி நகரைச் சேர்ந்த மதிமாறன் மகன் ராம்பிரசாத், 24; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வினோத்குமார், 21; ஆகிய இருவரை கைது செய்து, விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. ரஜத்சதுர்வேதி பரிந்துரையின் பேரில் கலெக்டர் பிரசாந்த், இந்த இருவரையும்

குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us