/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு திருமஞ்சனம்
ADDED : பிப் 23, 2024 10:19 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசி சதுர்த்தியை முன்னிட்டு நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
ஆதியும் அந்தமும் அருட்பெரும் ஜோதியான சிவபெருமானின் அவதாரத்தில் இன்றியமையாதது நடராஜர் திருக்கோலம். மாசி சதுர்த்தி சிவனடியார்களின் சிறப்புமிக்க விழாவாக கொண்டாடப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு நடராஜர் சபையில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவாசனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சாஆவன பூஜை, வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், திருமஞ்சனம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.