ADDED : ஜன 25, 2024 04:08 AM
கள்ளக்குறிச்சி : அணைகரைகோட்டாலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்தவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த அணைகரைகோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சரவணன், 30; இவருக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம். கடந்த 4ம் தேதி வயிற்றுவலி அதிமானதால் சரவணன் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். சரவணனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், பின் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் நேற்று முன்தினம் இரவு இறந்தார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.