
ரிஷிவந்தியம்; வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பொறுப்பேற்றார்.
வாணாபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு பிரிவுக்குமாற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக, சங்கராபுரத்தில் வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்த சேகர் பதவி உயர்வு பெற்று வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.