Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

மாணவன் தற்கொலை

ADDED : செப் 08, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அருகே பாட்டி திட்டியதால் கோபமடைந்த 8ம் வகுப்பு மாணவன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாணாபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் முகி, 14; இவர், பழையசிறுவங் கூரில் உள்ள பாட்டி தையல்நாயகி வீட்டில் தங்கி, அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படிக் கிறார். கடந்த 5ம் தேதி மாலை விளையாடிக்கொண்டிருந்த முகியை, இவரது பாட்டி கண்டித்தார்.

இதனால் கோபமடைந்த முகி வீட்டில் உள்ள ஜன்னல் கம்பியில் புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பகண்டைகூட்ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us