ADDED : ஜூன் 19, 2025 05:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகரில் ஆராஆனந்த சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் உள்ள கிருஷ்ணருக்குஅஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. உற்சவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்களை பாடி, தரிசனம்செய்தனர்.