Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/செப்டிக் டேங்க் கழிவுகள் கழிவுநீர் கால்வாயில் திறப்பு

செப்டிக் டேங்க் கழிவுகள் கழிவுநீர் கால்வாயில் திறப்பு

செப்டிக் டேங்க் கழிவுகள் கழிவுநீர் கால்வாயில் திறப்பு

செப்டிக் டேங்க் கழிவுகள் கழிவுநீர் கால்வாயில் திறப்பு

ADDED : ஜன 23, 2024 05:01 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் கால்வாயில் குடியிருப்புகளின் செப்டிக் டேங்க் கழிவுகள் திறந்து விடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அலுவல் பணி மற்றும் கல்வி தேவைகளுக்காக இங்கு நாள்தோறும் குடியேறும் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

மேலும் பள்ளிகள், கல்லுாரிகள், குடியிப்புகள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நகரின் உள்கட்டமைப்புகள் சீரமைக்கப்படாததால் அசுர கதியில் விரிவாக்கம் பெற்று வரும் இங்கு ஏராளமான பிரச்னைகள் நீடித்து வருகின்றன.

பெரும்பாலான சாலையோர குடியிருப்புகளின் செப்டிக் கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் திறந்து விடுகின்றனர்.

இதனால் குடியிருப்புகள், கடைகள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, கழிவு நீர் கால்வாயில் செப்டிக் டேங்க் கழிவுகளை திறந்து விடுவதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us