Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மயங்கி விழுந்த காவலாளி சாவு

மயங்கி விழுந்த காவலாளி சாவு

மயங்கி விழுந்த காவலாளி சாவு

மயங்கி விழுந்த காவலாளி சாவு

ADDED : மே 16, 2025 12:07 AM


Google News
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் மயங்கி விழுந்த தனியார் மருத்துவமனை காவலாளி உயிரிழந்தார்.

கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் குப்பன் மகன் பாண்டியன், 65; இவர் கச்சிராயபாளையம் எல்.எப்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணிக்கு வந்தவர், நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us