Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்

வருவாய்த்துறை சங்கங்கள் போராட்டம்

ADDED : ஜூன் 26, 2025 02:34 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பேரணி மற்றும் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடந்தது.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காதர்அலி தலைமை தாங்கினார். பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தவமணி, இந்திரகுமார், நாகராஜன், அருள்ஜோதி, செம்மலை முன்னிலை வகித்தனர். பிரபாகர் வரவேற்றார். இதில், மந்தைவெளியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றுதல்; காலிப்பணியிடங்களை நிரப்புதல்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம், நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு, கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம், கிராம நிருவாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் வருவாய் கிராம ஊழியர் சங்க நிர்வாகிகள் 655 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால், கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணிகள் முடங்கின.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us