Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்..

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்..

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்..

மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்..

ADDED : ஜூன் 02, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். டி.இ.ஓ., (தனியார்) துரைராஜ், ஏ.இ.ஓ.,க்கள் சுமித்ரா, ராதாகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், நகர மன்ற தலைவர் சுப்ராயலு முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். மலையரசன் எம்.பி., மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினார்.

தொடர்ந்து இப்பள்ளிக்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தராஜ், அசோக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா தலைமையில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார். செயலாளர் கிரிராஜூ, இணை செயலாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us