ADDED : மார் 18, 2025 11:00 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் மாயவன் மகள் கலைச்செல்வி,15; கடந்த, 16ம் தேதி மதியம் 3:00 மணியளவில் இயற்கை உபாதைக்கு சென்றவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அச்சமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் சின்னபொண்ணு, கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.