ADDED : ஜூலை 04, 2025 02:42 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையத்தை சேர்ந்த ராயர் மகள் தீபிகா,17; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்திரனர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.