Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நிரந்தர ஆசிரியர் நியமிக்க கோரி பிள்ளைகளுடன் பெற்றோர் தர்ணா

நிரந்தர ஆசிரியர் நியமிக்க கோரி பிள்ளைகளுடன் பெற்றோர் தர்ணா

நிரந்தர ஆசிரியர் நியமிக்க கோரி பிள்ளைகளுடன் பெற்றோர் தர்ணா

நிரந்தர ஆசிரியர் நியமிக்க கோரி பிள்ளைகளுடன் பெற்றோர் தர்ணா

ADDED : ஜூன் 09, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : ஆதனுார் துவக்கப் பள்ளியில் நிரந்த ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த ஆதனுார் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் சிலர், தங்களது பிள்ளைகளுடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர்.

அங்கு மதியம் 12:10 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பாதுகாப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி மனு அளித்துச் செல்லும்படி அறிவுறுத்தினர். அதன்படி 12:15 மணியளவில் தர்ணாவை கைவிட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மனு விபரம்:

ஆதனுார் ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரயராக பணிபுரிந்த அருள்தாஸ் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார்.

அருள்தாஸ் பணியில் இருந்த போது, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் 2 தற்காலிக ஆசிரியர்களை நியமித்தார்.

அருள்தாஸ் ஓய்வு பெற்ற பிறகு புதிய தலைமை ஆசிரியர் நியமிக்காமல், செம்மனங்கூர் பள்ளி ஆசிரியர் கூடுதல் பொறுப்பாக ஆதனுார் துவக்கப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆதனுார் துவக்கப் பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க வலியுறுத்தி 2 முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால், மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், பள்ளியின் நிர்வாக செயல்பாடு மோசமாக உள்ளது. எனவே, பள்ளிக்கு நிரந்தர ஆசிரியர் நியமிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்ற கலெக்டர் பிரசாந்த், ஆசிரியர் நியமிக்கப்படுவார் என உறுதியளித்தன் பேரில், அனைவரும் கலைந்து சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us