Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் புறக்காவல் உதவி மையம்

கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் புறக்காவல் உதவி மையம்

கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் புறக்காவல் உதவி மையம்

கள்ளக்குறிச்சியில் பூட்டிக்கிடக்கும் ஏமப்பேர் புறக்காவல் உதவி மையம்

ADDED : செப் 01, 2025 11:39 PM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பை பாஸ் சந்திப்பு புறக்காவல் காவல் உதவி மையம் பூட்டியே காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் காவல் உதவி மையம் கடந்த 2018ம் ஆண்டு, செப்.16ம் தேதி அப்போதைய எஸ்.பி., ஜெயக்குமாரால் திறந்து வைக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன விபத்துக்களை தடுப்பது, நகரப்பகுதிக்குள் கனரக வாகனங்கள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது, நகருக்குள் நிர்வகிக்கப்படும் ஒருவழிச்சாலை முறைகளை சீர்படுத்துவது உள்ளிட்ட பணிகளுக்காக இக்காவல் உதவி மையம் அமைக்கப்பட்டது. துவங்கிய சில நாட்களுக்கு பிறகு, இங்கு போலீசார் பணியமர்த்தப்படாததால் பூட்டியே கிடக்கிறது.

கள்ளக்குறிச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலை காவல் உதவி மையத்திற்கு போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us