Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 06, 2024 05:41 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இயக்க வட்ட தலைவர் மஞ்சப்பன் தலைமை தாங்கினார். திருக்கோவிலுார் அமைப்பாளர் சூரன், மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட குழு மாயவன், ஜெயக்கொடி, மணிகண்டன், சிவராமன், குமார், ஒன்றிய அமைப்பாளர் பாலையா முன்னிலை வகித்தனர்.

இந்திய கம்யூ., மாவட்ட செயாலளர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் செந்தில், வட்ட செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், விளம்பார் ஊராட்சியில் தேசிய வேலை உறுதித் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், 15வது நிதிக்குழு வேலைகள், மண் எடுப்பது உள்ளிட்ட பணிகளில் நடந்து வரும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us