Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் இன்று கருத்து கேட்புக் கூட்டம்

ADDED : பிப் 06, 2024 05:41 AM


Google News
கள்ளக்குறிச்சி : லோக்சபா தேர்தலையொட்டி அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நிர்வாகிகள் சார்பில் கள்ளக்குறிச்சியில் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.

மாவட்ட செயலாளர் குமரகுரு அறிக்கை:

லோக்சபா தேர்தலையொட்டி அ.தி.மு.க.,வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள குழு, மண்டலம் வாரியாக சென்று பொதுமக்களிடம் கருத்துகளை கேட்கிறது.

அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த மாடூர் புறவழிச்சாலையில் உள்ள ஏ.என்.பி., திருமண மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் இன்று 6ம் தேதி நடக்கிறது.

இதில், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயராமன், ஜெயக்குமார், சண்முகம், செம்மலை, வளர்மதி, மணியன், உதயக்குமார், வைகைச்செல்வன் பங்கேற்கின் றனர்.

எனவே, கள்ளக்குறிச்சி, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாய சங்கம், வணிகர் சங்கம், ரோட்டரி மற்றும் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கூட்டத்தில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us