Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

திருமணமான 5வது நாளில் புதுமணப்பெண் மாயம்

ADDED : ஜூலை 02, 2025 11:37 PM


Google News
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே திருமணமான 5 வது நாட்களில் மாயமான புதுமண பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த கோளபாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகள் சந்தியா, 19; இவருக்கும் உளுந்லுார்பேட்டை அடுத்த நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கும், கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது.

கடந்த 1ம் தேதி தாய் வீட்டிற்கு வந்த சந்தியா, மதியம் 1:30 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறி வெளியில் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து சந்தியாவின் தாய் உமா கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து சந்தியாவை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us