/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
ADDED : செப் 01, 2025 01:06 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் நடந்த சிறப்பு முகாமில், 69 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
உளுந்துார்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளியில் நடந்த 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரி சோதனை நடந்தது.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு டாக்டர் பரணிதரன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கணேஷ்ராஜா, மனநல மருத்துவர் ஜெயசீலன், கண் டாக்டர் தேமாங்கனி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 76 மாற்றுத்திற னாளிகளை பரிசோதித்தனர்.
அதில் தகுதிவாய்ந்த, 69 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் 3 மாற்றுத்திறனாளிகள், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.