Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி

ADDED : மார் 17, 2025 08:00 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நகரின் முக்கிய சாலைகளில், சாலையோர பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி துருகம் சாலை மற்றும் சேலம் சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், கார்கள் உட்பட நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இப்பகுதியில் பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ளதால் மாணவ மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் உள்ளது.

இந்நிலையில் பல இடங்களில் உள்ள சாலையோர பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

கனரக வாகனங்கள் ஒன்றையொன்று முந்திசெல்லும் தருணத்தில் சாலையோர பள்ளத்தால் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர்.

எனவே, போக்குவரத்து மிகுதியான துருகம் மற்றும் சேலம் சாலைகளில் வாகன ஓட்டிகளை அச்சுருத்தி வரும் சாலையோர பள்ளங்களில் மண்களை கொட்டி சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us