Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

மாயமான தொழிலாளி உடல் கண்டெடுப்பு

ADDED : மே 19, 2025 11:40 PM


Google News
கள்ளக்குறிச்சி : தண்டலை கிராமத்தில் மாயமான கூலித் தொழிலாளி உடல் மீட்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன், 46; விவசாய கூலித்தொழிலாளி. இவர், கடந்த 17ம் தேதி மயானத்தில் குழிவெட்டும் பணியில் ஈடுபட்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் மயானத்திற்கு அருகே உள்ள விளைநில கிணற்றில் அவரது உடல் மிதந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆனந்தன் உடலை மீட்டு, அவரது இறப்புக்கான காரணம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us