/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி
அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி
அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி
அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பியவர் விபத்தில் பலி
ADDED : ஜூன் 11, 2025 08:00 AM
சின்னசேலம்; சின்னசேலம் அருகே, அறுபதாம் கல்யாணம் முடித்து வீடு திரும்பிய முதியவர், விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, விஜயாநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், 60; இவரது அறுபதாம் கல்யாணம் திருக்கடையூரில் நடந்தது. அதற்காக, கர்நாடக மாநில அரசு பஸ்சை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தனர். திருமணம் முடிந்து, சொந்த ஊருக்கு திரும்பினர்.
நேற்று அதிகாலை 3:00 மணிக்கு விருதாச்சலம்- வி.கூட்ரோடு, தேசிய நெடுஞ்சாலையில் நைனார்பாளையம் அருகே சென்றபோது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதியது.
இதில் ரமேஷ் பலத்த காயமடைந்ததார். மேலும் பஸ்சில் பயணம் செய்த அவரது உறவினர்கள் 4 பேரும் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.